காலையில் அறுக்கப்படும் கோழிதானே என்று அதற்க்கு தண்ணி உணவு வைப்பதில் கூட அலட்சியம் ஒரு கொடுமை !
பிறகு கோழிகளை அறுத்து மற்ற கோழிகளின் கண் முன்னே அதை துடிக்க போடுவது ஒரு கொடுமை !
அறுப்பதிலாவது சரியான கத்தியை கொண்டு இலகுவாக அதன் உயிர் பிரியுமாறு செய்கிறார்களா என்றால் அதுவும் அதிக நேரம் போராடி உயிர்பிரியும்படி அலட்சியம் காட்டுவது ஒரு கொடுமை !